"கூட்டாட்சி தத்துவம் பாதுகாக்கப்படும்" - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

கூட்டாட்சி தத்துவம், மதச்சார்பின்மையை பாதுகாக்க மதிமுக பாடுபடும் என, வைகோ கூறியுள்ளார்.

Update: 2021-05-06 11:33 GMT
 மதிமுகவின் 28ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கொடியேற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாழையடி வாழையாக மதிமுக வளர்ந்து நிற்கும் என கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த வைகோ, தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளும் சரியானதே என கூறியுள்ளார்.




Tags:    

மேலும் செய்திகள்