தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா... முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

Update: 2021-04-11 05:47 GMT
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆலோசனை நடத்த உள்ளார். 

தமிழகத்தில் தேர்தலுக்குபின் வேகமெடுக்கும் கொரோனாவால், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை, திரையரங்கம், வணிக வளாகம் மற்றும் உணவகங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு தளர்வுகளுடன், ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இது தவிர,  சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் கடற்கரைகளில் மக்கள் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்தலுக்குபின் நேற்று இரவு சென்னை திரும்பிய முதலமைச்சர் பழனிசாமி நாளை முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.  இதில், அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். ஆலோசனைக்கு பின், கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்