இரட்டை கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை - விழுப்புரம் டிஐஜி பாண்டியன் உறுதி

இரட்டை கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விழுப்புரம் டிஐஜி பாண்டியன் உறுதி அளித்துள்ளார்.

Update: 2021-04-10 09:30 GMT
இரட்டை கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விழுப்புரம் டிஐஜி பாண்டியன் உறுதி அளித்துள்ளார். 
விழுப்பும் சரக டிஐஜி பாண்டியன், ராணிப்பேட்டை மாவட்டம் சோகனூர் கிராமத்திற்கு வந்தார். இறந்து போன இளைஞர்கள் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர் ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த இரட்டைக் கொலை சம்பவம் குறித்து மாவட்ட எஸ்பி தலைமையிலான குழு விசாரித்து வருவதாக தெரிவித்தார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான தண்டனை வாங்கி தரப்படும் என டிஐஜி பாண்டியன் உறுதியளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்