கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டாம் - மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, கிராம சபை கூட்டங்கள் நடத்த வேண்டாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Update: 2021-01-25 12:09 GMT
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, கிராம சபை கூட்டங்கள் நடத்த வேண்டாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், மறு உத்தரவு வரும் வரை, கிராம சபை கூட்டங்களை நடத்த அனுமதிக்க வேண்டாம் எனவும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. கிராம பஞ்சாயத்துக்களிடம், இதற்கான தகுந்த உத்தரவுகளை பிறப்பித்து, கிராம சபை கூட்டம் நடத்தாமல் பார்த்து கொள்ள வேண்டும் எனவும் ஆட்சியர்களுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்