ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட பிரமோஸ் - குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்து சாதனை

அரபிக் கடல் பகுதியில் நடைபெற்ற பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது. இந்திய ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ர‌ஷியாவுடன் இணைந்து பிரமோஸ் ஏவுகணைகளை தயாரித்து வருகிறது.

Update: 2020-10-18 10:59 GMT
அரபிக் கடல் பகுதியில் நடைபெற்ற பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது. இந்திய ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ர‌ஷியாவுடன் இணைந்து பிரமோஸ் ஏவுகணைகளை தயாரித்து வருகிறது. இந்நிலையில்  அரபிக்கடலில், கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பலில் இருந்து சூப்பர்சோனிக் ஏவுகணையான பிரமோஸ் ஏவுகணை சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது. நகரும் வாகனத்தில் இருந்து செலுத்தப்பட்ட பிரமோஸ் ஏவுகணை 300 கி.மீ தொலைவில் இருந்த குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது என டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்