"நடிகர் சூர்யா தவறாக நடக்கவும் மாட்டார்... பேசவும் மாட்டார்" - இயக்குநர் பாரதிராஜா கருத்து

நீட் விவகாரம் தொடர்பாக, நடிகர் சூர்யா தவறாக நடக்கவும் மாட்டார், தவறாக பேசவும் மாட்டார் என்று இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

Update: 2020-09-14 09:58 GMT
நீட் விவகாரம் தொடர்பாக,  நடிகர் சூர்யா தவறாக நடக்கவும் மாட்டார், தவறாக பேசவும் மாட்டார் என்று இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். சென்னையில், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய அலுவலகத்தை திறந்து வைத்த பின் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, நீட் தற்கொலை தொடர்பாக கருத்து தெரிவித்த நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு தொடர பதிவாளருக்கு  நீதியரசர் ஒருவர், கடிதம் எழுதியுள்ளது தொடர்பாக, பாரதிராஜாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது,  நடிகர் சூர்யா தவறாக நடக்கவும் மாட்டார், தவறாக பேசவும் மாட்டார் பாரதிராஜா பதிலளித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்