பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் - முதலமைச்சர் அறிவிப்பு

பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 25 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Update: 2020-09-06 09:49 GMT
பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 25 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், மாமல்லபுரம் காவல் நிலைய தனிப்பிரிவில் தலைமைக் காவலர் ஈஸ்வரன், காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் தனபால், மதுரை கூடல்புதூரில் காவலர் நீலமேகம், சேத்துப்பட்டு முதல் நிலை பெண் காவலர் எழிலரசி, உள்ளிட்ட உயிரிழந்த 25 காவலர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 3 லட்ச ரூபாய், வழங்க உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்