தியேட்டர் திறப்பு: மத்திய அரசு ஆலோசனை - தென்னிந்திய பிரதிநிதிகளுக்கு அழைப்பு இல்லை என தகவல்

திரையரங்குகளை மீண்டும் திறப்பது குறித்து, மத்திய அரசு ஆலோசனை நடத்த உள்ள நிலையில் தென்னிந்தியாவில் இருந்து யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2020-09-05 07:29 GMT
திரையரங்குகளை மீண்டும் திறப்பது குறித்து, மத்திய அரசு ஆலோசனை நடத்த உள்ள நிலையில் தென்னிந்தியாவில் இருந்து யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. திரையரங்குகளை மீண்டும் திறப்பது குறித்து மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை அமைப்பு திரையரங்கு உரிமையாளர்கள், தியேட்டர் அதிபர்கள் சங்கத்தினருக்கு அழைப்பு விடுத்துள்ளது. வரும் 8ம் தேதி இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் தென்னிந்தியாவில் உள்ள திரையரங்கு உரிமையாளர்களுக்கோ, சங்கங்களுக்க்கோ அழைப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்