போலீஸ் போல் நடித்து கைவரிசை காட்டிய நபர் - முட்டை வியாபாரியின் கவனத்தை திசை திருப்பி கொள்ளை

போலீஸ் போல நடித்து முட்டை வியாபாரியிடம் இருந்து 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்ற கொள்ளையரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2020-08-30 09:59 GMT
சென்னை ஐஸ்அவுஸ்  பகுதியை சேர்ந்தவர் முகமது வாசிம். கடந்த 2 ஆண்டுகளாக முட்டை வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று ஏடிஎம் மையத்திற்கு சென்று விட்டு வந்த அவரை, போலீஸ் உடையில் இருந்த 2 பேர் மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அப்போது முகமது வாசிம் வசம் இருந்த 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு கணக்கு காட்ட வேண்டும் என கூறிய அவர்கள், பணத்தை பறிமுதல் செய்தனர். மந்தைவெளி காவல்நிலையத்திற்கு வந்து கணக்கு காட்டி விட்டு பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு அவரை அனுப்பியுள்ளனர். ஆனால் காவல் நிலையத்திற்கு அவர் சென்ற போது, தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக முகமது வாசிம் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிசிடிவி காட்சிகளை வைத்தும் மோசடி கும்பலை தேடும் பணி நடைபெற்று வருகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்