அரசின் இலவச டயாலிசிஸ் மையத்தை திறந்து வைத்தார் மாநகராட்சி ஆணையர்

சென்னை ஈஞ்சம்பாக்கம் நகர்புற சமுதாய நல மருத்துவமனையில் இலவச டயாலிசிஸ் மையத்தை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் திறந்து வைத்தார்.

Update: 2020-07-11 11:51 GMT
சென்னை ஈஞ்சம்பாக்கம் நகர்புற சமுதாய நல மருத்துவமனையில், இலவச டயாலிசிஸ் மையத்தை, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏழைகள் டயாலிசிஸ் கிடைக்காமல் தவறான முடிவுக்கு செல்வதை தடுக்கவே இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக கூறினார். பிரசவத்திற்கு 15 நாட்களுக்கு முன்பாக, கர்ப்பிணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக மாநகராட்சி ஆணையர் தெளிவுப்படுத்தினார். 
Tags:    

மேலும் செய்திகள்