சத்தியமங்கலம் ஊழியருக்கு கொரோனா தொற்று - நகராட்சி அலுவலகம் மூடல்

சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகத்தில் வரிவசூல் பிரிவில் பணிபுரியும் பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2020-07-06 09:46 GMT
சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகத்தில் வரிவசூல் பிரிவில் பணிபுரியும் பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் 64 பேருக்கு உக்கரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் நகராட்சி அலுவலக வளாகத்தில் கொரோனா பரிசோதனைக்காக மாதிரிகள் சேகரித்தனர். இதைத்தொடர்ந்து நகராட்சி அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பின்னர் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்