மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் மீண்டும் ஆலோசனை

வருகிற 30 ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை நடத்துகிறார்.

Update: 2020-06-27 07:40 GMT
வருகிற 30 ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை நடத்துகிறார். வருகிற 29 ஆம் தேதி நடத்தப்பட உள்ள ஆலோசனையில், மருத்துவ நிபுணர் குழுவினர்கள் கொரோனா வைரஸ் பரவல் நிலைமை குறித்து முதலமைச்சரிடம் விரிவாக எடுத்துரைக்க உள்ளனர். மேலும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆலோசனைக்கு பிறகு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்