மருத்துவ படிப்புகளில் 50% இட ஒதுக்கீடு - மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 சதவீத இடங்களை இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி தமிழக அரசு மற்றும் மதிமுக தொடர்ந்த வழக்கில் பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-06-17 09:13 GMT
தமிழகத்தில் மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில், 50 சதவீத இடங்களை இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி தமிழக அரசு மற்றும் மதிமுக தொடர்ந்த வழக்கில், பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று நடைபெற்ற விசாரணையில், நீதிபதிகள் சுப்பைய்யா, கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது. இந்நிலையில், இதே கோரிக்கையை வலியுறுத்தி திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்குகளோடு சேர்த்து, தமிழக அரசு மற்றும் மதிமுக தொடர்ந்து வழக்குகள் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.  
Tags:    

மேலும் செய்திகள்