தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா

தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Update: 2020-06-13 11:41 GMT
தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் சென்னையிலிருந்து திரும்பியவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதுதவிர ஹரியானா மாநிலத்தில் இருந்து வந்த இருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தென்காசியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளது. இதில் குணமடைந்து வீடு திரும்பியவர்களை தவிர தற்போது 44 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்