புதுக்கோட்டையில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் - 80 சதவீத ஊதியத்தை பிடித்ததாக குற்றச்சாட்டு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக புதுக்கோட்டை மண்டலத்தில் பணியாற்றும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

Update: 2020-05-31 09:39 GMT
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக புதுக்கோட்டை மண்டலத்தில் பணியாற்றும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து மார்ச் 24 ஆம் தேதி ரத்து செய்யப்பட்ட பேருந்து போக்குவரத்து நாளை தொடங்க உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக புதுக்கோட்டை மண்டலத்தில் உள்ள ஏழு பணிமனைகளில் பணியாற்றும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு இந்த மாத சம்பளத்தில் 80 சதவீதம் பிடித்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள போக்குவரத்து துறை ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் புதுக்கோட்டை அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பாக ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  பணிக்கு திரும்ப தயார் என்றும், தங்கள் ஊதியத்தை முழுமையாக தரவேண்டும் என அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்