கொரோனா சிகிச்சையில் தனியார் மருத்துவமனையை கண்டிக்கிறேன் - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்காக கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Update: 2020-05-30 11:27 GMT
தனியார் மருத்துவமனைகளில், கொரோனா சிகிச்சைக்காக கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை புளியந்தோப்பில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்த பின்  செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.  மேலும், சமூக பரவல் இல்லாத நிலையை ஏற்படுத்த அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்