இன்று கொரோனா உச்சம் - சென்னையில் புதிதாக 558 பேர்

தமிழகத்தில் அதிகபட்சமாக இன்று ஒரே நாளில் 817 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2020-05-27 17:12 GMT
தமிழகத்தில் அதிகபட்சமாக இன்று ஒரே நாளில் 817 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த எண்ணிக்கை 18 ஆயிரத்து 545 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல, சென்னையில் மட்டும் 558 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 203ஆக  அதிகரித்துள்ளது. இதுபோல, கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 133ஆக உயர்ந்துள்ள நிலையில், இதுவரை 9 ஆயிரத்து 909 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்