"பிறந்த நாளில் வாழ்த்தியவர்களுக்கு நன்றி" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

பிறந்த நாளில் தன்னை வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2020-05-12 12:13 GMT
பிறந்த நாளில் தன்னை வாழ்த்தியவர்களுக்கு நன்றி  தெரிவித்துக் கொள்வதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு  மற்றும்  பிரதமர் மோடி, தமிழக, தெலுங்கானா ஆளுநர்கள் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் இந்தத்  தருணத்தில், பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என கேட்டுக் கொண்டிருந்ததாகவும், இருப்பினும் வாழ்த்திய நல்ல உள்ளங்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்