விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கமலுக்கு பாராட்டு - சமூக வலை தளத்தில் எம்.பி. ரவிக்குமார் புகழாரம்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு ரவிக்குமார் எம்.பி. பாராட்டு தெரிவித்துள்ளார்.

Update: 2020-05-09 03:59 GMT
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு ரவிக்குமார் எம்.பி. பாராட்டு தெரிவித்துள்ளார். 'நாங்களெல்லாம்  அடைத்துக் கிடக்கும் அரசின் செவிகளை ஆர்ப்பாட்டத்தின் மூலம் தட்டிக்கொண்டிருந்தபோது, நீங்கள் நீதியின் கதவைத் தட்டித் திறந்துவிட்டீர்கள்,' என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.பி.  ரவிக்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், 'மூச்சுத் திணறும்போது கிடைக்கும் ஆக்சிஜனின் அளவு சிறிதானாலும் பலன் மிகப்பெரிது' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்