"அவசிய தேவையின்றி ஒருவருக்கு மேல் பயணிக்கும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்" - சென்னை காவல் துறை உத்தரவு

அவசிய தேவையின்றி ஒருவருக்கு மேல் பயணிக்கும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர்.

Update: 2020-04-22 10:50 GMT
மருத்துவம், காய்கறி உள்ளிட்ட அவசிய தேவைக்கு மட்டுமே வெளிவர அனுமதி அளித்துள்ளதை தவறாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டும் சென்னை  காவல்துறை, அவசியத் தேவையின்றி வெளியில் வருவோரது வாகனங்களை பறிமுதல் செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. ஒருவருக்கும் மேல் பயணிக்கும் இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளதால், போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்