திருவள்ளூர் மாவட்ட போலீசாருக்கு முதலமைச்சர் பாராட்டு
திருவள்ளூர் மாவட்ட போலீசார் மக்களை தேடிச் சென்று உதவி செய்து வருகின்றனர் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டியுள்ளார்.;
இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இதனை குறிப்பிட்டுள்ளார். மக்களுக்கு உதவி செய்வதை தலைமையேற்று சிறப்பாக நடத்தி வரும் அரவிந்தன் ஐபிஎஸ் மற்றும் அனைத்து காவலர்களுக்கும் தனது பாராட்டுகளை தெரிவிப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.