ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட உள்ள அரிசி - ஆந்திராவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் வழங்க உள்ள 2,600 டன் அரிசி, ஆந்திராவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.

Update: 2020-03-30 12:59 GMT
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் வழங்க உள்ள 2,600 டன் அரிசி, ஆந்திராவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. திண்டுக்கல் முழுவதும் முழுநேரம் மற்றும் பகுதிநேர கடைகள் என 1035 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த ரேஷன் கடைகளில் 6 லட்சத்து 27 ஆயிரம் ரேஷன் கார்டுகள் உள்ளது. நடப்பு மாதத்தோடு சேர்த்து அடுத்த ஏப்ரல் மாத அரிசியும் சேர்த்து வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்களுக்கு வினியோகிக்க தேவையான ரேஷன் அரிசி ஆந்திர மாநிலத்திலிருந்து 2,600 டன் அளவில் திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு, சரக்கு ரயில் மூலம் இன்று வந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்