ஓரே நாடு ஒரே ரேசன் திட்டம் ஒத்திவைப்பு - உணவுத் துறை அமைச்சர் காமராஜ் அறிவிப்பு

'ஒரே நாடு ஒரே ரேசன்' திட்ட அமலாக்கம் ஒத்தி வைக்கப்படுவதாக, உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2020-03-30 11:10 GMT
'ஒரே நாடு ஒரே ரேசன்' திட்ட அமலாக்கம் ஒத்தி வைக்கப்படுவதாக, உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தொடங்கப்படுவதாக இருந்தது. இதற்காக, முதல்கட்டமாக, பரிசோதனை முயற்சியும் சில இடங்களில் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், இந்த திட்டம், கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகள் காரணமாக ஒத்தி வைக்கப்படுவதாக, திருவாரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்