வெளிமாநில தமிழர்களுக்கு வாழ்வாதார உதவி - உறுதி செய்யுமாறு ராமதாஸ் வலியுறுத்தல்

கொரோனா வைரஸ் குறித்து அனைத்து வீடுகளிலும் ஆய்வு நடத்த தமிழக அரசு முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2020-03-30 03:39 GMT
கொரோனா வைரஸ் குறித்து  அனைத்து வீடுகளிலும் ஆய்வு நடத்த தமிழக அரசு முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்தும் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ள அனைவரையும் முதலில் தனிமைப்படுத்த வேண்டும்என கூறியுள்ளார். மேலும்,  தேவைப்பட்டால் அவர்களுக்கு கொரோனா ஆய்வு மேற்கொண்டு நோய்ப்பரவலைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்