காசிக்கு சுற்றுலா சென்றவர்கள் சிக்கி தவிப்பு - உடனடியாக மீட்குமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை

திருச்செந்தூரில் இருந்து, காசிக்கு சுற்றுலா சென்ற 6 பேர், தங்களை மீட்குமாறு தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2020-03-29 02:53 GMT
திருச்செந்தூரில் இருந்து, காசிக்கு சுற்றுலா சென்ற 6 பேர், தங்களை மீட்குமாறு தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். வீரபாகு மூர்த்தி என்பவர் தலைமையில், கடந்த 15 ஆம் தேதி, காசிக்கு சென்ற அவர்கள், 23 ஆம் தேதி கயா என்ற இடத்திற்கு சென்ற நிலையில், சொந்த ஊர் திரும்பு முடியாமல் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து உணவு, உடை மற்றும் தங்குமிடம் இல்லாமல் தவிக்கும், 6 பேரும் தங்களை உடனடியாக மீட்குமாறு, வீடியோ மூலம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்