நாமக்கல் : மருந்து பொருட்களை கொண்டு செல்லும் ஆளில்லா விமானம்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தமிழ்நாடு மாணவர்கள் ஆராய்ச்சி அமைப்பை சேர்ந்த மாணவர்கள் மருந்து பொருட்களை கொண்டு செல்லும் ஆளில்லா விமானத்தை இயக்கி சோதனை செய்து பார்த்தனர்.

Update: 2020-03-25 12:42 GMT
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தமிழ்நாடு மாணவர்கள் ஆராய்ச்சி அமைப்பை சேர்ந்த மாணவர்கள் மருந்து பொருட்களை கொண்டு செல்லும் ஆளில்லா விமானத்தை இயக்கி சோதனை செய்து பார்த்தனர். இதன்மூலம் 12 கிலோ எடையுள்ள மருந்து பொருட்களை பாதிக்கப்பட்ட இடங்களுக்கு கொண்டு செல்ல முடியும் என்று மாணவர்கள் தெரிவித்தனர். மேலும் ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான உரிமம் வழங்குவதை மத்திய மாநில அரசுகள் விரைவுபடுத்த வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்