"கொரோனா வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை" - திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

கொரோனா தொடர்பாக வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-03-25 09:19 GMT
கொரோனா தொடர்பாக வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மாவட்டம் முழுவதும், வெளிநாடுகளுக்கு சென்று வந்தோர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 178 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக கூறினார். மேலும், வீடில்லாத ஏழைகளுக்கு, கூட்டு சமையல் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர், தெரிவித்தார்
Tags:    

மேலும் செய்திகள்