10 வயது சிறுமி மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை...

பத்து வயது சிறுமியை பாலியல் வன்முறை செய்து 3வது மாடியில் இருந்து தூக்கி வீசிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2020-03-21 08:17 GMT
சென்னை மதுரவாயலில் 10 வயதான சிறுமி நேற்று நள்ளிரவில் கழிவறைக்கு செல்ல வெளியே வந்துள்ளார். அதன்பிறகு சிறுமியை காணவில்லை என கூறப்படுகிறது. இதனால் பதற்றமான பெ​ற்றோர் உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். அப்போது வீட்டின் பின்புறம் மயங்கிய நிலையில் கிடந்த சிறுமியை மீட்ட பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்ற 29 வயதான இளைஞர் கழிவறைக்கு சென்ற சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்முறை செய்துள்ளார். சிறுமி சத்தம் போட்டதால் ஆத்திரமடைந்த அவர், 3வது மாடியில் இருந்து தூக்கி வீசியதாக, தெரியவந்ததை தொடர்ந்து சுரேஷை போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்