"பிள்ளைகளை அரசு பள்ளியில் படிக்க வையுங்கள்" - துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் வேண்டுகோள்
பொள்ளாச்சியில் அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் கலந்துக் கொண்ட துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், பிள்ளைகளை அரசு பள்ளியில் படிக்க வையுங்கள், அரசு பள்ளியில் படிப்பு சரியில்லை என்றால் எங்களிடம் கூறுங்கள் நாங்கள் சரி செய்கிறோம் என கூறினார். இன்னும் இரண்டு ஆண்டுகளில் பொள்ளாச்சியில் ஏராளமான தகவல் தொழில்நுட்ப தொழிற்சாலைகள் வர உள்ளதாக அவர் தெரிவித்தார்.