கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை திறப்பு - முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்

கரூரில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.

Update: 2020-03-05 11:14 GMT
கரூரில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். 155.8 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஏழு தளங்களில் 700 படுக்கைகளுடன் இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. மேலும் குளித்தலை தலைமை அரசு மருத்துவமனையில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டடம் மற்றும் 1.2 கோடியில் கட்டப்பட்ட வாங்கல் ஆரம்ப சுகாதார நிலையத்தையும் முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்