அதிவேக படகை கொண்டு, மீனவர்கள் மீது தாக்குதல்: காரைக்கால் மீனவர்களை கண்டித்து வேலைநிறுத்தம்

சீர்காழி அருகே நடுக்கடலில் மீன்பிடித்தபோது அதிவேக படகை கொண்டு தாக்குதல் நடத்திய காரைக்கால் மீனவர்களை கண்டித்து, தொடுவாய் கிராம மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-03-03 02:33 GMT
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்ற இந்த சம்பவத்தில்,  தொடுவாய் கிராம மீனவர்களுக்கு சொந்தமான பைபர் படகுகள்,  வலைகள் உட்பட 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன. மேலும், விஜயபிரபு  என்ற மீனவரும் காயமடைந்தார். சம்பவம் தொடர்பாக, கடலோர காவல்படையினர் மற்றும் சீர்காழி ​​போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்