கடன்களுக்கு ஈடான சொத்துகளை ஏலம் விடும் எஸ்.பி.ஐ : ஆயிரத்துக்கும் மேற்பட்ட சொத்துகள் ஒரே நேரத்தில் ஏலம்

எஸ்.பி.ஐ வங்கியில் அடமானமாக உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட சொத்துகளை ஒரே நேரத்தில் ஏலம் விட அந்த வங்கி முடிவு செய்துள்ளது.

Update: 2020-02-25 21:05 GMT
எஸ்.பி.ஐ வங்கியில் அடமானமாக உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட சொத்துகளை ஒரே நேரத்தில் ஏலம் விட அந்த வங்கி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில், வர்த்தக கட்டிடங்கள் மற்றும் வீடுகள்  உள்ளிட்ட ஆயிரம் சொத்துகளை ஆன்லைன் முறையில் நாளை ஏலம் விட உள்ளதாக கூறியுள்ளது. இந்த சொத்துகள் டெல்லி, மும்பை, சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் உள்ளதாகவும், வாடிக்கையாளர்கள் கடன்களை செலுத்தாத காரணத்தால், வங்கி சட்டப்படி கைப்பற்றப்பட்ட சொத்துகள் என்றும் கூறியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்