கும்பகோணம் வலங்கைமான் பாடைகட்டி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் - ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்ட கோபுர கலசங்கள்

கும்பகோணம் அருகே உள்ள வலங்கைமான் பாடைகட்டி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோபுர கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.

Update: 2020-02-11 14:16 GMT
கும்பகோணம் அருகே உள்ள வலங்கைமான் பாடைகட்டி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு,கோபுர கலசங்கள்  ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. கடந்த மூன்று நாட்களாக யாகசாலை பூஜைகள் நடந்து வந்த நிலையில், தங்க முலாம் பூசப்பட்ட கலசங்கள் மற்றும் செப்பு கலசங்கள் முக்கிய வீதிகளில் வழியே ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, அம்மன் சன்னதியில்  வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து புதன்கிழமை குடமுழுக்கு நடைபெற உள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்