"அரசு மருத்துவமனையை சுத்தம் செய்யுங்கள்" - மோதலில் ஈடுபட்ட மாணவர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு

மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் 28 பேரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை சுத்தம் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-02-11 02:18 GMT
மோதலில் ஈடுபட்ட திருச்சி தனியார் கல்லூரி மாணவர்கள் 28 பேரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை சுத்தம் செய்ய வேண்டும் என்று  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் மோதல் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, 28 மாணவர்கள் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்தும், மருத்துவமனையை சுத்தம் செய்ததும் முதல்வரிடம் சான்றிதழ் பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்