கேரளா : தந்தை 2 மகன்களுடன் கோயில் குளத்தில் மூழ்கி பலி

கேரள மாநிலம் கொல்லம் அருகே தமிழகத்தை சேர்ந்த தந்தை தனது இரண்டு மகன்களுடன் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2020-02-10 03:56 GMT
கேரள மாநிலம் கொல்லம் அருகே தமிழகத்தை சேர்ந்த தந்தை தனது இரண்டு மகன்களுடன் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கரியமாணிக்கபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் தனது இரண்டு மகன்கள் சரவணன், விக்னேஷ் ஆகியோரை அழைத்துக் கொண்டு, கேரள மாநிலம் கொல்லம் அருகே கடைக்கல் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, அங்குள்ள கோயில் குளத்தில் குளித்த போது, நீரில் மூழ்கி மூவரும் பலியானதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மூன்று பேரின் உடல்களையும் மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்