சதுரகிரி கோயிலில் மூச்சு திணறலால் முதியவர் பலி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் முதியவர் ஒருவர் மூச்சுதிணறலால் உயிரிழந்தார்.

Update: 2020-02-09 21:06 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் முதியவர் ஒருவர் மூச்சுதிணறலால் உயிரிழந்தார். நேற்று பெளர்ணமியை முன்னிட்டு பக்தர்களுக்கு சதுரகிரி கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது. காரைக்காலைச் சேர்ந்த குமார் என்ற முதியவர், கோயிலுக்கு சென்ற போது, கோரக்கர் குகை மலைப் பகுதியில்  மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்