காடையாம்பட்டி ஒன்றிய குழு முதல் கூட்டம் : ரூ.3 கோடி கடன் - உறுப்பினர்கள் அதிர்ச்சி

ஓமலூர் அருகே நடைபெற்ற காடையாம்பட்டி ஒன்றிய குழுவின் முதல் கூட்டத்தில், சுமார் 3 கோடி ரூபாய் கடன் இருப்பதாக அதிகாரிகள் கூறியதால், புதிய உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Update: 2020-02-08 22:17 GMT
ஓமலூர் அருகே நடைபெற்ற  காடையாம்பட்டி ஒன்றிய குழுவின் முதல் கூட்டத்தில், சுமார் 3 கோடி ரூபாய் கடன் இருப்பதாக அதிகாரிகள் கூறியதால், புதிய உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  காடையாம்பட்டி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் மாரியம்மாள் தலைமையில் நடைபெற்றது. அப்போது  ஒன்றியத்தின் நிதிநிலைமை குறித்து உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஒன்றிய ஆணையர் கருணாநிதி, சுமார் 3 கோடியே 32 லட்சம் ரூபாய் கடன் இருப்பதாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறுப்பினர்கள், நலத்திட்டங்களை நிறைவேற்றுவது எப்படி என கேள்வி எழுப்பினர். 
Tags:    

மேலும் செய்திகள்