கட்சி கொடிக்கம்பம் விழுந்து கால் அகற்றப்பட்ட பெண்ணிற்கு அரசு வேலை : அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பணி நியமன ஆணை வழங்கினார்

கோவையில் கட்சி கொடிக்கம்பம் விழுந்த விபத்தில் கால் அகற்றப்பட்ட பெண்ணிற்கு, அரசு வேலைக்கான ஆணையை, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

Update: 2020-02-07 21:24 GMT
கடந்த ஆண்டு  கோவை அவினாசி சாலையில், அரசியல் கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவிற்காக வைக்கப்பட்ட பேனர் விழுந்து, சிங்காநல்லூர் ஊரைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பெண்ணில் கால் முறிந்தது. இதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், அந்த பெண்ணிற்கு அரசு வேலை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதனிடையே, ராஜேஸ்வரின் கால் அகற்றப்பட்ட நிலையில், அவருக்கு, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் மாவட்ட ஆட்சியர்  ராஜாமணி ஆகியோர், அரசுவேலைக்கான பணி நியமன ஆணையை வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்