"தரையில் அமர்ந்து படித்துதான் அமைச்சர் ஆனோம்" - அமைச்சர் செல்லூர் ராஜூ

தரையில் அமர்ந்து படித்துதான் அமைச்சர் ஆனோம் என மாணவர்கள் மத்தியில் பேசுகையில் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

Update: 2020-02-07 14:16 GMT
தரையில் அமர்ந்து படித்துதான் அமைச்சர் ஆனோம் என மாணவர்கள் மத்தியில் பேசுகையில் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். மதுரையில், பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர், மாணவர்கள் நன்றாக படித்து உயர்பதவிகளுக்கு வரவேண்டும் என ஊக்கப்படுத்தினார். தற்போது பள்ளிகளில் மேசைகள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன  என்றும், தான் படித்த காலத்தில் தரையில் அமர்ந்து படித்துதான் தற்போது அமைச்சராகி உள்ளதாகவும் குறிப்பிட்டார். தமிழக பள்ளிக்கல்வி தரம் உயர்த்தப்பட்டுள்ளது என்றும் செல்லூர் ராஜூ கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்