"மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதி வாரியாக நடத்த வேண்டும்" - பாமக சார்பில் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் நடக்கவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பை, சாதி வாரியாக நடத்த வலியுறுத்தி, பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2020-02-06 20:15 GMT
. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்,ராமதாஸ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது,பேசிய ராமதாஸ், அதிமுக கூட்டணியில் இணைய பாமக வைத்த 10 அம்ச கோரிக்கைகளில், சாதி வாரி கணக்கெடுப்பு முதன்மையானது என கூறினார். வரும் சட்டமன்ற கூட்ட தொடரில், தமிழக அரசு இதற்கான சட்டத்தை இயற்ற வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தினார்.
Tags:    

மேலும் செய்திகள்