பேப்பர் மில்லில் பயங்கர தீ விபத்து - ரூ.200 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அடுத்த சுக்குருவார்பட்டியில் தனியார் பேப்பர் மில்லில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2020-02-01 04:04 GMT
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அடுத்த சுக்குருவார்பட்டியில் தனியார் பேப்பர் மில்லில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 8 தீயணைப்பு வாகனங்களில் வந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் தீயை கட்டுப்படுத்த முயன்றனர். இதில், முப்பதுக்கும் மேற்பட்ட தனியார் தண்ணீர் வாகனங்கள் மூலமும் தீயை அணைக்கும் முயற்சியில் அங்குள்ள தொழிலாளர்களும் இறங்கினர். இதனால் சில மணி நேர போராட்டத்திற்குப்பின் தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் 200 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து கருகின. 

Tags:    

மேலும் செய்திகள்