புதுக்கோட்டை மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையால் கைது

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 14 பேரை, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-12-29 16:29 GMT
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 14 பேரை, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சனிக்கிழமையன்று,  மீன் பிடிக்கச் சென்ற ஜெகதாபட்டினம் மீனவர்கள் 14 பேரை, எல்லை தாண்டி வந்ததாக கூறி, இலங்கை கடற்படை கைது செய்தது. அதோடு மூன்று படகையும் சிறைபிடித்தது. இதை தொடர்ந்து, மீனவர்கள், ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து ஜனவரி 9-ஆம் தேதி வரை மீனவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர், அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்
Tags:    

மேலும் செய்திகள்