குடியரசு தலைவர் வரும் 25ம் தேதி கன்னியாகுமரி வருகை - விவேகானந்தர் நினைவு மண்டப பொன்விழாவில் பங்கேற்பு

விவேகானந்தர் நினைவு மண்டப பொன்விழாவில் பங்கேற்பதற்காக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வரும் 25ம் தேதி கன்னியாகுமரி வருகிறார்.;

Update: 2019-12-22 12:29 GMT
விவேகானந்தர் நினைவு மண்டப பொன்விழாவில் பங்கேற்பதற்காக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வரும் 25ம் தேதி கன்னியாகுமரி வருகிறார்.  விவேகானந்தா கேந்திராவில் நடைபெறும் விழாவில் பங்கேற்கும் குடியரசு தலைவர், கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிடுகிறார். பின்னர் பகவதி அம்மன் கோயிலுக்கு சென்று அவர்  சுவாமி தரிசனம் செய்கிறார்.  குடியரசு தலைவர் வருகையையொட்டி
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென்மண்டல ஐஜி சண்முகராஜேஸ்வரன் தலைமையில் காவல்துறை உயர் அதிகாரிகள்  ஆய்வு செய்தனர்
Tags:    

மேலும் செய்திகள்