15 வருடங்களாக கோயில் உண்டியலில் கைவரிசை - நூதன முறையில் திருடிய கொள்ளையன் கைது

மதுரையில் 15 வருடங்களாக பல்வேறு கோயில்களில் உண்டியலில் பணத்தை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-12-22 10:01 GMT
மதுரையில் 15 வருடங்களாக பல்வேறு கோயில்களில் உண்டியலில் பணத்தை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் உண்டியலுக்குள் இரும்பு கம்பியை விட்டு பணத்தை கொள்ளையடிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் ஆரப்பாளையத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் கோயிலில் திருடுவது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்