"பொங்கல் பரிசு தடைகோரி வழக்கு : பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு"

உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்க கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

Update: 2019-12-20 19:22 GMT
உள்ளாட்சி தேர்தல் முடியும் வரை பொங்கல் பரிசு திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்க கோரி, திருவண்ணாமலையைச் சேர்ந்த அலமேலு என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு உள்ளதாகவும், தேர்தல் முடிந்த பின் பொங்கல் பரிசு வழங்க அனுமதியளிக்கப்பட்டு உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்கும்படி, மாநில தேர்தல்  ஆணையத்துக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 10ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்