நள்ளிரவில் குழந்தையை கடத்திய இளைஞர் : அடி உதையுடன் போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்

புதுக்கோட்டையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிகாலை 3 மணியளவில் ஒருவர் குழந்தையுடன் வெளியே வந்துள்ளார்.

Update: 2019-12-14 04:46 GMT
புதுக்கோட்டையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிகாலை 3 மணியளவில் ஒருவர் குழந்தையுடன் வெளியே வந்துள்ளார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பொது மக்கள், அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். முன்னுக்குப் பின் முரணாக பேசிய அவரிடம் இருந்த குழந்தை மீட்ட பொதுமக்கள், அடித்து உதைத்துள்ளனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், குழந்தைகள் வார்டில் இருந்து அந்த நபர் குழந்தையை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மருத்துவமனை காவல் நிலையத்தில் அவரை ஒப்படைத்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்