ஜெயலலிதா 3ஆம் ஆண்டு நினைவு தினம் : நினைவிடத்தில் முன்னாள் மேயர் சைதை துரைசாமி அஞ்சலி

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 3ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில், முன்னாள் மேயர் சைதை துரைசாமி அஞ்சலி செலுத்தினார்.

Update: 2019-12-05 03:13 GMT
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 3ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில், முன்னாள் மேயர் சைதை துரைசாமி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா மேற்கொண்ட நலத்திட்ட பணிகளை பட்டியலிட்டார். மேலும், ஜெயலலிதா மறைவால், நலத்திட்டங்களை பெறும் வாய்ப்பை மக்கள் தவறிவிட்டதாக கூறிய அவர்,  எம்.ஜி.ஆர், -ஜெயலலிதா ஆகிய இருதலைவர்களுக்கு நினைவிடத்தை தேர்வுசெய்யும் வாய்ப்பு தமக்கு வாய்த்தது பெருமை என்றும் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்