பெண்ணை தாக்கியதாக வழக்கு : நடராஜர் கோவில் தீட்சிதர் தர்ஷனுக்கு முன் ஜாமீன்

பெண்ணை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் தர்ஷனுக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-12-03 11:54 GMT
பெண்ணை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் தர்ஷனுக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தீட்சிதர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முன்ஜாமீன் மனு நீதிபதி  சேஷசாயி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது எதிர்தரப்பில முன்ஜாமீன் வழங்க ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து 15 நாட்கள் ராமேஸ்வரத்தில் தங்கி இருந்து ராமநாதசாமி கோயில் செயல் அலுவலர் முன்  கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் தீட்சிதர் தர்ஷனுக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்