கடலூர்: உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ஸ்டாலின் ரூ. 1 லட்சம் நிதி உதவி
கடலூரில் கனமழையால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு நிதி உதவியும், மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களையும் திமுக தலைவர் ஸ்டாலின் வழங்கினார்.
கடலூரில் கனமழையால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு நிதி உதவியும், மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களையும் திமுக தலைவர் ஸ்டாலின் வழங்கினார். கம்மியம்பேட்டை வீடு இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர். அவர்களின் வீட்டுக்கு சென்ற ஸ்டாலின் திமுக சார்பில் ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கினார். பின்னர் மழை பாதிப்பால் கூத்தப்பாக்கம் பகுதியில் பள்ளியில் தங்கியுள்ளோரை சந்தித்து ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.