குற்றால அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கம் - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

குற்றாலம் மெயின் அருவி உள்பட அனைத்து அருவிகளிலும் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Update: 2019-12-02 07:28 GMT
குற்றாலம் மெயின் அருவி உள்பட அனைத்து அருவிகளிலும் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி  வழங்கப்பட்டுள்ளது. பலத்த மழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அருவிகளில் 
வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் அனுமதி அளித்தனர். இதனையடுத்து அங்கு வந்த சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல் போட்டு மகிழ்ந்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்